கணவன் சாப்பாட்டுக் கோப்பையால் தாக்கியதில், மனைவி பலி!
Read Time:1 Minute, 14 Second
திருகோணமலை – கோமரங்கடவெல அடம்பென பகுதியில் கணவனின் தாக்குதலுக்கு உள்ளாகி மனைவி உயிரிழந்துள்ளார்.
51 வயதான யூ. தயாவதி என்ற பெண்ணே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
உணவு வேளையில் இவ்விருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் மோதலாக மாறியதை அடுத்து கணவரால் சாப்பாட்டுக் கோப்பையால் தாக்கப்பட்டு மனைவி உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை பதில் நீதவான் தி. திருச்செந்தில்நாதன் சடலத்தை பார்வையிட்டு மரண விசாரணைகளின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
தாக்குதல் நடத்திய கணவரான உபசேன நந்தசிறி நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 24ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
Average Rating