மனைவியை பிரிந்த சந்தானம்?
சின்னத்திரையில் நடித்து கொண்டிருந்த சந்தானம், மன்மதன் படம் மூலம் வெள்ளித்திரையில் நகை்சுவை நடிகராக அறிமுகமானார்.
அதன் பிறகு அசுரத்தனமான வளர்ச்சியில் ஒரு நாளைக்கு 10 இலட்ச ரூபா ( இந்திய ரூபாய்) சம்பளம் வாங்கும் நடிகரானார்.
அப்படி வளர்ந்த சந்தானம் நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் நாயகனான களம் இறங்கியுள்ளார்.
இந்த நிலையில் சந்தானம் தனது மனைவியை பிரிந்து தனியாக வசிக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
சென்னையின் புறநகரான பொழிச்சலூரில் குடும்பத்துடன் வசித்து வந்த சந்தானம், மனைவியுடன் பிரச்சினை ஏற்பட்டதால் கடந்த சில வாரங்களாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது அலுவலகத்திலேயே தங்கி வருகிறாராம்.
அதுமட்டுமில்லாமல் தனியாக ஒரு வீட்டை வாங்கி இருக்கும் சந்தானம் விரைவில் அந்த வீட்டில் தனியாக குடியேற இருக்கிறாராம்.
Average Rating