பொலிஸாருடன் இணையப் போகும் பொதுபல சேனா
Read Time:1 Minute, 26 Second
அமைச்சர்களின் பாதுகாப்பில் யானை வியாபாரம் இடம்பெற்று வருவதாகவும் அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மோசடி உடன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் இல்லாவிடின் யானை வியாபாரத்துடன் தொடர்புடைய நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படும். புத்த தர்மத்தை முன்னால் வைத்துக் கொண்டு இந்த மோசடி இடம்பெறுகிறது.
அண்மையில் யானைகள் கொலை செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் சுட்டிகாட்டியுள்ளார். பொதுபல சேனா இனி தனியாக அல்லாது பொலிஸாருடன் இணைந்து சுற்றிவளைப்புக்குச் செல்லும்
காட்டில் இருக்கும் யானைகளின் எண்ணிக்கையை கணக்கிட வேண்டிய அதிகாரிகள் வீட்டில் இருக்கும் யானைகளின் எண்ணிக்கையை கணக்கிட முடியாதுள்ளமை கேலியானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating