முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிப்பு: ரவிகரனுக்கு நீதிமன்றம் அழைப்பு
முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் உள்ள ரவிகரன் வீட்டுக்கு நேற்று மாலை 5 மணியளவில் சென்றவர் நீதிமன்ற அறிவித்தலை கையளித்திருந்தார்.
அவ் அறிவித்தலில் இன்றையதினம் காலை 9 மணிக்கு நீதிமன்றத்தின் முன்பாக தவறாது சமூகமளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற அறிவித்தலை கையளிக்க வந்தவரிடம் நீதிமன்ற அழைப்பிற்கான காரணம் என்ன? என தான் வினாவிய போது அது தொடர்பில் தமக்கு அறிவிக்கவில்லை என அவர் தெரிவித்து சென்றதாக ரவிகரன் தெரிவித்தார்.
கடந்த 17ம் திகதி ரவிகரனால் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் முள்ளிவாய்க்கால் மேற்கு பிரதேசத்தில் நினைவு கூறப்பட்டது.
அத்துடன் கடந்த 12ம் திகதி மாலை ரவிகரன் வீட்டுக்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் நீங்கள் விடுதலைப்புலி உறுப்பினரா? பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கா? என அவரிடம் விசாரணைகளை நடாத்தி சென்றமையும் குறிப்பிடத்தக்கது.
Average Rating