புலிச் சந்தேகநபர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவில் தடுத்து வைப்பு
Read Time:1 Minute, 1 Second
மலேசியாவில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் மூவர் நேற்று இரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க இவர்கள் முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்திரலிங்கம் ராஜா, மகாதேவன் கிருபாகரன், செல்லதுறை கிருபானந்தன் ஆகிய மூவரே நேற்று இரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் தற்போது பயங்கரவாத விசாரணை பிரிவில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
Average Rating