பெண்களிடம் திருமண ஆசை காட்டி, கொள்ளையிட்டவர் விளக்கமறியலில்..

Read Time:2 Minute, 9 Second

2063096711Untitled-1ஹட்டன் பகுதியில் பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய குமாஸ்தா பெண்ணை திருமணம் முடிப்பதாக கூறி கடந்த 31 ம் திகதி நோர்வூட் காட்டுப் பகுதிக்கு கடத்திச் சென்று, துஷ்பிரயோகம் செய்து அவரிம் தங்க நகைகளையும் கொள்ளையிட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று (04.06.2014) நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று, (05.06.2014) மாலை ஹட்டன் நீதிமான்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

நுவரெலியாவில் வசிக்கும் 31 வயதான குறித்த சந்தேகநபர், பெண்ணைகளை திருமணம் செய்வதாக கூறி பத்திரிகைகளுக்கு மனமகள் தேவை என விளம்பரம் செய்வார்.

அதற்கு பதில் கிடைக்கும் போது தொலைபேசி மூலம் தொடர்பு வைத்து பிறகு சந்தித்து இவ்வாறான செயல்களில் ஈடுப்படுவதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரண்டு குழந்தையின் தகப்பனான இவர் மீது நானுஒயா பொலிஸில் இரு முறைபாடுகளும், கொத்மலை பொலிஸில் ஒரு முறைபாடும் உள்ளதோடு, நுவரெலியா நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த மாதம் கொழும்பில் ஒரு பெண்ணை கடத்தி ஹட்டனில் கட்டி வைத்த சம்பவத்திற்கும் மேற்படி சந்தேகநபருக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் இவரோடு மேலும் சில நபர்கள் இருப்பதாகவும் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் நோர்வூட் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “டச்” விட்டுப் போனதால் தடுமாற்றம்: அமலாபால் படத்தில் கஸ்தூரி நீக்கம்..
Next post கனடாவில் காவற்துறையினர் பலி..