விலங்குகளை கொன்று குவிக்கும் சுவிஸ்: ஆய்வில் தகவல்
சுவிசில் வருடத்திற்கு 11000க்கும் மேற்பட்ட விலங்குகள் கொல்லப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சுவிசில் மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக ஆண்டுதோறும் விலங்குகள் பலியாக்கப்படுகிறது.இதில் கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் சுமார் 5,90000 மிருகங்கள் கொல்லப்பட்டு ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிகரிக்கும் மிருகங்களின் பலி எண்ணிக்கையால் 2.7 சதவீதத்திலிருந்து தற்போது 30 சதவீதமாக பலி கொடுக்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குறிப்பாக கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இந்த ஆய்வுகள் நடைபெறுவதாக உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை அமைச்சகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த நிலைமையை சரிசெய்ய இனி வருங்காலத்தில் செய்யும் ஆராய்ச்சியின் போது விலங்குகள் துன்புறுத்தப்படாது என அறிந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் கடந்தாண்டு மட்டும் 30000 மேற்பட்ட விலங்குகள் ஆராய்ச்சிக்காக மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது.
Average Rating