நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!
திருப்பத்தூர் அருகே கந்திலியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகள் கற்பகம் (வயது 19), திருப்பத்தூரில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்தார். தினமும் கற்பகம் வீட்டிலிருந்து திருப்பத்தூருக்கு தனியார் பஸ்சில் செல்வது வழக்கம். அப்போது அந்த தனியார் பஸ்சின் டிரைவர் செவ்வாத்தூரை சேர்ந்த கமலக்கண்ணன் (29) என்பவருடன் கற்பகத்திற்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்கள் 2 பேரும் ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கினர்.
இந்த காதல் விவகாரம் இரு தரப்பு பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. இரு தரப்பு பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 29–ந் தேதியன்று காதல் ஜோடி கமலக்கண்ணன் – கற்பகம் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் 2 பேரும் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டு, பெற்றோர், உறவினருக்கு பயந்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். இது குறித்து இரு தரப்பு பெற்றோர், உறவினர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating