11 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் தலைமறைவு!!
Read Time:1 Minute, 15 Second
நோட்டன் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தெப்பட்டன் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் பாடசாலை சென்று வந்த சிறுமி வீட்டிலிருந்த வேளை இளைஞன் ஒருவர் பாலியல் துஸ்பிரயேகம் செய்துள்ளார்.
11 வயதுச் சிறுமி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் தந்தை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் குறித்த சிறுமி பரிசேதனைக்காக நாவலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டு தலைமறையாகியுள்ள 19 வயதுடைய இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Average Rating