கருணை கொலையை சட்டபூர்வமாக்க எதிர்ப்பு!!
சுப்ரீம் கோர்ட்டில், ‘காமன் காஸ்’ என்ற தொண்டு நிறுவனம் தாக்கல் செய்துள்ள பொதுநலன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
படுத்த படுக்கையாக கிடக்கும் ஒரு நோயாளி, குணமடைய மாட்டார் என்று ஒரு மருத்துவ நிபுணர் கருதினால், செயற்கை சுவாச கருவிகளை அகற்றி, அவர் மரணம் அடையும் உரிமை வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், அந்த நோயாளியின் நோய் வேதனை நீடிக்கவே செய்யும். கவுரவமாக இறக்கும் உரிமையை ஒருவரின் அடிப்படை உரிமை ஆக்க வேண்டும். இதற்கு தேவையான சட்ட திருத்தங்களை கொண்டு வருமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். செயற்கை சுவாசம் உதவியுடன், வாழ்நாளை நீட்டிப்பது, இயற்கையான வாழ்நாளை செயற்கையாக நீட்டிப்பது ஆகும். அத்தகையவர்கள் இறக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை முதலில் 3 நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. இதில், முரண்பாடான கருத்துகள் நிலவுவதாலும், சட்டம் குறித்த தெளிவு தேவைப்படுவதாலும் அதிக நீதிபதிகளைக் கொண்ட பெஞ்சுக்கு வழக்கை மாற்றுவதாக நீதிபதிகள் கூறினர். அதன்படி, தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் அமைக்கப்பட்டது.
அதன் முன்பு, நேற்று இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, கருணை கொலையை சட்டபூர்வமாக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
இந்த விவகாரம், கோர்ட்டில் முடிவு செய்யப்படக்கூடியது அல்ல. பாராளுமன்றம்தான் விவாதித்து முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசைப் பொறுத்தவரை, கருணை கொலையை ஏற்கவில்லை. அது ஒருவகையான தற்கொலை. தற்கொலை, ஒரு குற்றம். கருணை கொலையை சட்டபூர்வமாக்கினால், அது தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே, அதை சட்டபூர்வமாக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
அதற்கு நீதிபதிகள், ‘கருணை கொலையை சட்டபூர்வமாக்காமல் இருப்பதற்கு, அது தவறாக பயன்படுத்தப்படும் என்பதை காரணமாக கூறக்கூடாது. தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க என்ன பாதுகாப்பு அம்சங்களை சேர்க்கலாம் என்று கூறுங்கள்’ என்று கூறினர்.
மேலும் மனுதாரரைப் பார்த்து, ‘கருணை கொலை பற்றி உலகம் முழுவதும் விவாதம் நடந்து வருகிறது. ஆனால் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. மரணத்தை ஏற்படுத்த குறைந்த வேதனை கொண்ட வழி என்ன?’ என்று கேட்டனர். பின்னர், இந்த விவகாரம், அரசியல் சட்டம் மட்டுமின்றி, தார்மீகம், மதம், மருத்துவம் ஆகியவை சம்பந்தப்பட்டது என்பதால், மாநில அரசுகளின் கருத்துகளை கேட்பது அவசியம் என்று நீதிபதிகள் கூறினர்.
எனவே, அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், இவ்வழக்கில் கோர்ட்டுக்கு உதவுவதற்காக, முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் டி.ஆர்.அந்திஅர்ஜுனாவை ஆலோசகராக அரசியல் சட்ட பெஞ்ச் நியமித்தது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating