வசீகர குரலால் பெண்ணாக நடித்து இளைஞரை காதலிக்க வைத்த ஆண்!!
17 வயதான கிஷோர் என்பவர் சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்புர் நகருக்குட்பட்ட பாலிகா பகுதியில் வசித்து வருகிறார். இவரது நண்பர் ஒருவர் தனக்கு தெரிந்த பெண்ணின் செல்போன் நம்பரை கிஷோரிடம் கொடுத்துள்ளார். அந்த எண்ணை தொடர்பு கொண்ட கிஷோரை அப்பெண்ணின் வசீகர குரல் வெகுவாக கவர்ந்தது.
தனது பெயர் நேகா பன்னா என்று கூறிய அந்த பெண்ணிடம் பேசிய சில நாட்களிலேயே கிஷோர் அவரை காதலிக்க ஆரம்பித்துள்ளார். அவளை திருமணம் செய்யவும் கிஷோர் தயாரானார். ஒரு நாள் கிஷோரை சந்திக்க நேகா அவரது வீட்டுக்கு வந்துள்ளார். கிஷோரின் வீட்டுக்கு வந்ததது முதல் தனது முகத்தை ஆடைகளால் மூடிய படியே நேகா இருந்துள்ளார். வீட்டிற்குள் நுழைந்த நேகா கிஷோரிடம் தான் அவரது வீட்டை விட்டு வெளியேறப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
கிஷோரின் பெற்றோர் நேகா வீட்டில் தங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, வாடகை காரில் நேகாவை ஏற்றிக்கொண்ட கிஷோர் அவளது வீட்டை காண்பிக்குமாறு கூறியுள்ளார். ஆனால் வீட்டைக் காண்பிக்காமல் தொடர்ந்து போக்கு காட்டிய நேகாவின் செயலால் வெறுத்துப்போன கிஷோர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசாரிடமும் நேகா தவறான முகவரியை கொடுத்து தனது லீலையை காண்பித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் போலீசாரிடமிருந்து தப்பவும் முயன்றுள்ளார் நேகா. அப்போது கிஷோரின் உறவினர்கள் அவரை பிடித்து முகத்தில் உள்ள ஆடையை விலக்கிப் பார்த்தபோது அவர் ஆண் என்று தெரிந்தது. இதனால் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.
Average Rating