மேட்டூர் அருகே ஓடும் பஸ்சில் 2 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது!!
Read Time:1 Minute, 0 Second
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (50). இவர் இன்று காலை 9.30 மணியளவில் மேட்டூரில் இருந்து கொளத்தூர் செல்லும் அரசு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். அப்போது பென்னாகரம் போலீசாருக்கு பாக்கியலட்சுமி கஞ்சா கடத்தி செல்வதாக தெரியவந்தது.
இதையடுத்து பென்னாகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்–இன்ஸ்பெக்டர் வீரமுத்து ஆகியோர் பஸ்சை கருங்கல்லூர் பகுதியில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பாக்கியலட்சுமியிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating