வீட்டில் வாடகைக்கு இருந்த நபரை கல்லால் அடித்துக் கொன்ற முதியவர்!!
Read Time:56 Second
தனது வீட்டில் வாடகைக்கு இருந்த நபரை, கருங் கல்லால் தலை மற்றும் முகத்தில் அடித்துக் கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை, அளுபோமுல்ல பிரதேசத்தில் இன்று (21) அதிகாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயது நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் மற்றும் சந்தேகநபர் இருவரும் முச்சக்கரவண்டி சாரதிகளாவர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 60 வயதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Average Rating