அதிக மதிப்பெண்– அறிவாற்றல் பெற மாணவர்களின் நாக்கில் சரஸ்வதி பீஜாட்சரம்: பரத்வாஜ் சுவாமிகள் எழுதினார்!!
அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கைநகர் ஸ்ரீ யோகமாயா புவனேஸ்வரி பீடத்தில், கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற, நினைவாற்றல், அறிவாற்றல் பெருகிட மாணவர்களின் நாக்கில் சரஸ்வதி பீஜாட் சரத்தை, பரத்வாஜ் சுவாமிகள் எழுதினார்.
நூற்றுக்கணக்கான மாணவ–மாணவியர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ஞாபசக்தி அதிகம் பெற்று படிப்பில் கவனச்சிதறல் இல்லாமலிருக்கவும், சிரத்தை, நல் அறிவு, அடக்கம், பணிவு, பொறுமை, ஒழுக்கம், கல்வியில் அதிக நாட்டம் இருக்க வேண்டி, மாணவர்களின் நாக்கில் திரிசூலம் கொண்டு தேனில் தோய்த்து சரஸ்வதி பீஜாட்சரம், பாலாமந்திரம், கணபதி மூலமந்திரம் ஆகியவற்றை பரத்வாஜ் சுவாமிகள் எழுதினார்.
பரத்வாஜ் சுவாமிகள் தனது 9–வது வயதில் பேச்சு வராமல் பொது அறிவு இல்லாத நிலையில் சுவாமிகளின் தந்தை ஸ்ரீ புவனேஸ்வரி சுவாமிகள் தவம் நடத்தி திரிசூலத்தால் பாலா மந்திரம் எழுதி இன்று 110 புத்தகங்கள் எழுதும் நிலையில் அம்பிகை அருள் பாலித்து உள்ளார்.
இதகுறித்து பரத்வாஜ் சுவாமிகள் கூறியதாவது:–
மாணவச் செல்வங்கள் விஞ்ஞானம் வளர்ந்த நிலையில் அதன் பயன்பாட்டை உணர்ந்து மிகத் தேவையானவற்றை நீரில் கலந்த பாலை மட்டும் அன்னப்பட்சிகள் உறிஞ்சி அருந்துவதைப் போல உபயோகப்படுத்த வேண்டும் இறை சிந்தனை, பகவத் கீதை, கடவுள் வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
பெற்றோரிகளிடத்திலும், ஆசிரியர்களிடத்திலும் மரியாதை, விசுவாசத்துடன் இருத்தல் அவசியம். பிற உயிர்களிடத்தில் செடி கொடிகளிடத்திலும் பரிவு காட்ட வேண்டும் என்று பரத்வாஜ் சுவாமிகள் கூறினார். மாணவர்களுக்கு பகவத் கீதை, அபிராமி அந்தாதி, தாம் எழுதிய மாணவர்களுக்கான மணிக்கதைகள் ஆகிய புத்தகங்களை சுவாமிகள் வழங்கினார்.
நோட்டுப் புத்தகங்களும் பேனாவும் சேர்த்து யாவர்க்கும் ‘சரஸ்வதி ஆகு’ என்ற ஞாபசக்தி வளர்க்கும் பூஜையில் வைக்கப்பட்ட வல்லாரை சூரணத்தை பரத்வாஜ் சுவாமிகள் பிரசாதமாக வழங்கினார். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் நீயோகமாயா புவனேஸ்வரி பீடத்தில் மாணவ– மாணவர்களுக்கு கல்வி மேன்மை அடைய நாக்கில் பீஜாட்சரங்கள் எழுதப்படும் என்று பரத்வாஜ் சுவாமிகள் தெரிவித்தார்.
Average Rating