முன்னாள் காதலனுடன் இருந்த படத்தால் விவாகரத்து வழங்கிய கணவன்!!
சவூதி தலைநகர் ஜெட்டாவில் வேறோரு ஆடவருடன் தனது புது மனைவி இருந்த போட்டோவை பார்த்த அவரது கணவர் அந்த பெண்ணை உடனடியாக விவாகரத்து செய்துள்ளார்.
சமீபத்த்தில் வேறோரு நபரை திருமணம் செய்துக் கொண்டு குடும்பம் நடத்திவரும் தனது முன்னாள் காதலியான அந்த பெண்ணை கடந்த வாரம் தொடர்பு கொண்ட அந்த நபர், தன்னுடன் உல்லாசமாக வெளியே சுற்ற வரும்படி செல்போன் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
ரம்ஜானையொட்டி தனது கணவரின் குடும்பத்தார் தங்களது வீட்டுக்கு வரவுள்ளதால் இப்போதைக்கு தன்னால் வெளியே வர முடியாது என்று அந்த பெண் மறுத்துள்ளார். இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த அந்த நபர், ‘நீ உடனடியாக என்னுடன் வரவில்லை என்றால், சில மாதங்களுக்கு முன்னால் என் வீட்டில் நீயும் நானும் தனிமையில் இருந்த போட்டோவை உனது கணவனுக்கு அனுப்பி வைப்பேன்’ என்று மிரட்டியுள்ளார்.
சொன்னபடியே, அந்த பெண்ணின் வீட்டு வாசலில் சில மணி நேரம் வரை காத்திருந்த அவர், தனது கணவரின் குடும்பத்தாருடன் அந்த பெண் வெளியே செல்வதை கண்டு ஆத்திரமடைந்தார்.
உடனடியாக, ஜெட்டாவில் உள்ள தனது வீட்டில், தனக்காக அந்த புது மணப்பெண் சமையல் செய்யும் புகைப்படத்தையும் மேலும் சில படங்களையும் அந்த பெண்ணின் கணவரின் செல்போனுக்கு அவர் ’எம்.எம்.எஸ்.’ ஆக அனுப்பி வைத்தார்.
இதைக் கண்டு திகைத்துப் போன கணவன், உடனடியாக தனது மாமனார் வீட்டுக்கு மனைவியை அழைத்து சென்று, ’நான் கொலைக்காரன் ஆகாமல் இருக்க வேண்டும் என்றால்.., உடனடியாக உங்கள் மகளை ‘தலாக்’ செய்வதை தவிர வேறு வழியே இல்லை’ என்று கூறி, கையோடு விவாகரத்தும் செய்து விட்டு நடையை கட்டினார்.
Average Rating