பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமறித்து சரமாரி தாக்குதல்!!
செஞ்சியை அடுத்த ராமராஜன் பேட்டையை சேர்ந்தவர் ஹரீஸ். அதே பகுதியில் வசிப்பவர் ராஜூ, பால் வியாபாரிகள். இவர்கள் 2 பேருக்கும் இடையே பால் கொள்முதல் தொடர்பான தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் ஹரீஸ் மீது எதிர்தரப்பினர் ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.
எனவே ஹரீசின் தங்கை ரேவதி பள்ளிக்கு சென்று திரும்பியபோது எதிர்தரப்பை சேர்ந்த கும்பல் வழிமறித்து தகராறு செய்தது. பின்னர் உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் அந்த மாணவியை சரமாரி தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த ரேவதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதுபற்றி நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசில் ரேவதி புகார் செய்தார். அதன்பேரில் ராஜூ, அவரது தரப்பை சேர்ந்த மோகன், குமரன், தமிழ்செல்வன் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அதேபோல் எதிர்தரப்பை சேர்ந்த ராஜூ அளித்த புகாரின் பேரில் சேகர் உள்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating