பெங்களூரில் வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய கணவன்–மனைவி கைது!!
பெங்களூரில் வசிக்கும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த கணவன்–மனைவி தங்கள் வீட்டில் வேலைகள் செய்ய ஒரு சிறுமியை வேலைக்கு அமர்த்தி இருந்தனர்.
அந்த சிறுமிக்கு 13 வயது ஆகிறது. சிறுமியின் பெற்றோர் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலீங்கில் வசிக்கிறார்கள். அங்கிருந்து வேலைக்காக சிறுமியை மட்டும் பெங்களூர் அழைத்து வந்தனர்.
நாளடைவில் அந்த சிறுமி மீது கணவன்–மனைவி ஆதிக்கம் செலுத்தி சித்ரவதை செய்தனர். சொன்ன வேலையை சரியாக செய்யவில்லை என்று கூறி அடித்து உதைத்தனர். தினமும் அவர்களிடம் சித்ரவதைப்பட்டாள். சிலசமயம் கையில் கிடைக்கும் கரண்டி போன்ற பொருட்களால் தாக்கினார்கள்.
இதில் சிறுமியின் தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதற்கிடையில் சிறுமி தாக்க பட்டபோது சிறுமியின் தலையில் மிக பலத்த காயம் பட்டது. சிறுமியால் செயல் பட முடியாத நிலையில் அவளை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
டாக்டர்கள் சிறுமியை பரிசோதித்ததில் அவளது உடலில் பலமாக தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் என தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் போலீசுக்கு ரகசியமாக தகவல் கொடுத்து சிகிச்சை அளிக்க தொடங்கினார்கள்.
ஆனால் தம்பதி தாக்கியதில் ஏற்பட்ட தலை காயத்தால் சிறுமி கவலைக்கிடமான நிலையை அடைந்தாள். டாக்டர்கள் அவருக்கு செயற்கை சுவாசம் உள்ளிட்ட மருத்துவ கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையே ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரணை நடத்திய போலீசார் சிறுமியை தம்பதி சித்ரவதை செய்து இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து கணவன்–மனைவியை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மீது 14 வயதுக்குட்பட்ட சிறார் தொழிலாளர் தடை சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Average Rating