வேலைக்கு செல்லாததை மனைவி கண்டித்ததால் வாலிபர் தற்கொலை!!

Read Time:1 Minute, 3 Second

184db7fb-25e7-4173-a793-8410cbc33865_S_secvpfதர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் அருகில் உள்ள வி.கொல்லஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் அங்கப்பன் (35). இவர் பெங்களூரில் ஒரு ஜவுளி கடையில் வேலைப்பார்த்து வந்தார். இவருக்கு அதிகளவில் கடன் சுமை ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்து காணப்பட்டார்.

மேலும் வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதையடுத்து அவரது மனைவி அருள்மொழி, கணவரை கண்டித்தார். இதனால் மனம் உடைந்த அங்கப்பன் விஷம் குடித்து மயங்கினார். இதையடுத்து தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போளூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது!!
Next post ஒரு கும்பல் பெண் மீது மது ஊற்றி பாலியல் துஷ்பிரயோகம்!!