ஸ்ரீரங்கத்தில் மனைவியை எரித்து கொன்ற வழக்கில் கணவன் கைது!!
ஸ்ரீரங்கத்தில் கடந்த 2012–ம் ஆண்டு மனைவியை எரித்து கொன்றுவிட்டு தப்பியோடி தேடப்பட்டு வந்த கணவனை ஸ்ரீரங்கம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை வடக்குவாசல் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமின்குமார்(எ) பொன்னம்பலம்(39).இவரது மனைவி ரேவதி (34) இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகனும் 15வயதில் ஒரு மகளும் உள்ளனர். ரேவதிக்கும் மற்றொரு நபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
கடந்த 2012–ம் வருடம் சம்பவ தினத்தன்று மனைவி ரேவதி கள்ளக்காதலனுடன் இருப்பதை நேரில் பார்த்த குமார் வீட்டில் இருந்த மண்ணெண்னெயை எடுத்து மனைவி ரேவதி மீது ஊற்றி எரித்து கொன்று விட்டார். பின்னர் போலீசாருக்கு பயந்து ஓடி தலைமறைவாக இருந்துவந்தார்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று கொள்ளிடம் கரையில் தன் வீட்டிற்கு குமார் வந்திருப்பதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று குமாரை கைது செய்து சிறைக்கு அனுப்பிவைத்தனர்.
Average Rating