மதுரையில் இரட்டை சகோதரர்கள் உள்பட 3 மாணவர்கள் மாயம்: போலீசார் விசாரணை!!
மதுரை அண்ணாநகர் கே.டி.தங்கமணி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், ஆட்டோ டிரைவர். இவரது மகன்கள் மணிகண்டன் (14), மதன்குமார் (14) இரட்டை சகோதரர்களான 2 பேரும் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
அண்ணாநகர் முந்திரி தோப்பு பகுதியை சேர்ந்தவர் சீமான். இவரது மகன் பாண்டிகுரு (15), 9–ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்தனர்.
இரவு நீண்ட நேரமாகியும் அவர்கள் 3 பேரும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
இது குறித்து அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்–இன்ஸ்பெக்டர் வீராலெட்சுமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவர்கள் மணிகண்டன், மதன்குமார், பாண்டிகுரு ஆகியோரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்த மாணவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அண்ணாநகர் போலீஸ் நிலைய டெலிபோன் எண்கள் 0452–2533247, 0452–2580590 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 மாணவர்கள் மாயமான சம்பவம் அண்ணாநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating