மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி 1 வயது குழந்தை பலி!!

Read Time:2 Minute, 36 Second

e74bb5ef-2d20-4adc-8faa-3b95013845be_S_secvpfசென்னை, வானகரம், கன்னியப்ப நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன்(வயது 34). முகப்பேர் பகுதியில் உள்ள ஸ்டிக்கர் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரேமா(31). இவர்களது மகன் பிரசாந்த்(5), மகள் பிரதியுக்ஷா(1). குழந்தை பிரதியுக்ஷாவுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதலாவது பிறந்தநாளை கொண்டாட ஜானகிராமன் முடிவு செய்தார்.

இதற்காக குழந்தைக்கு புது ஆடை மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்கள் வாங்குவதற்காக நேற்று ஜானகிராமன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் தியாகராயநகர் வந்தார். அங்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இரவு 7.20 மணியளவில் இவர்களது மோட்டார் சைக்கிள் மெட்டிக்குளம் சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, கோயம்பேட்டில் இருந்து செய்யாறு நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று, அவர்களது மோட்டார் சைக்கிளின் பின்பக்கம் மோதியது.

இதில் நிலைகுலைந்த ஜானகிராமன் மற்றும் குடும்பத்தினர் கீழே விழுந்தனர். இதில், பிரேமாவின் கையில் இருந்த குழந்தை தவறி வலது பக்கமாக விழுந்தது. இதனால் குழந்தையின் தலை மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறியது. இதில் குழந்தை பிரதியுக்ஷாவின் தலை நசுங்கி அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தது. மற்ற 3 பேரும் இடது பக்கமாக விழுந்ததால், அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். 3 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான வந்தவாசியை சேர்ந்த பஸ் டிரைவர் சுந்தரராஜன்(55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேனி அருகே கணவரின் கள்ளக்காதலால் 3 மகள்களை கொன்று தாய் தற்கொலை!!
Next post அஞ்சானில் மட்டும் ஏன் இவ்வளவு கிளாமர்? சமந்தா பதில்!!