நாமக்கல் அருகே கிணற்றில் ஆண் பிணம்!!
Read Time:53 Second
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த கீரம்பூரில் பஸ் நிறுத்தம் அருகே தனியார் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் இன்று காலை 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. அவர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்றும் தெரியவில்லை.
இது குறித்து அந்தப்பகுதி மக்கள் பரமத்தி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
Average Rating