திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்: போலீசில் புகார்!!
Read Time:1 Minute, 11 Second
அவனியாபுரம் போலீஸ் சரகம் சிந்தாமணியை சேர்ந்தவர் வின்செண்ட் ராஜ். இவரது மகள் பியூலா ஜெனிபர் (வயது 18). இவர் தல்லாகுளம் ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த பியூலா ஜெனிபர் திடீரென்று மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் தந்தை வின்செண்ட் ராஜ் புகார் செய்தார்.
ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வேலை பார்த்த நபர் மீது சந்தேகம் இருப்பதாக அவர் புகாரில் தெரிவித்து உள்ளார். அதன் படி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating