ஏற்கனவே திருமணம் செய்துவிட்டோம்; காதலனுடன் தான் செல்வேன்: நீதிபதியிடம் மாணவி பிடிவாதம்!!
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி பிச்சம்மாள். இவர்களுக்கு தனலெட்சுமி (வயது19) என்ற மகள் உள்ளார். இவர் வேப்பூரில் உள்ள அரசு கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 15–ந்தேதி நடைபெற்ற சுதந்திரதின விழாவில் கலந்து கொள்வதற்காக கல்லூரிக்கு சென்ற தனலெட்சுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் தனலட்சுமி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மாரிமுத்து குன்னம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
இது பற்றி விசாரணை நடத்தியதில் மாணவி தனலட்சுமி அதே பகுதியை சேர்ந்த மணிவேல் என்பவரது மகன் ஆட்டோ டிரைவராக வேலை பார்க்கும் சந்திர சேகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்தது தெரிய வந்தது.
இதையடுத்து சந்திரசேகரின் செல்போன் எண்ணை கொண்டு அவர் இருக்கும் இடத்தை போலீசார் கண்டு பிடித்தனர். அவருடன் தனலட்சுமியும் இருப்பது தெரிந்தது.
பின்னர் இருவரையும் பிடித்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டு நீதிபதி சுரேஷ் முன்பு அவரது வீட்டில் போலீசார் ஆஜர்படுத் தினார்கள். நீதிபதியிடம் நாங்கள் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டோம். பெற்றோருடன் செல்லமாட்டேன், காதலனுடன் தான் செல்வேன் என மாணவி தனலட்சுமி பிடிவாதம் காட்டினார்.
இதையடுத்து காதலனுடன் செல்ல நீதிபதி அனுமதி வழங்கியதை தொடர்ந்து காதல் தம்பதி அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
Average Rating