மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவி மாயம்!!
Read Time:1 Minute, 16 Second
மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு, திருவாள புத்தூர் அழகன்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் நாகலிங்கம். இவரது மகள் அனிதா (வயது 22). இவர் திருவையாறு இசைக்கல்லூரியில் படித்து வந்தார்.
இந்த நிலையில் நாகலிங்கம் தனது மகளை கடந்த 7–ந்தேதி வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். அவர் 8–ந்தேதி வயலுக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அனிதா மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்று தெரியவிலலை.
இதைத் தொடர்ந்து நாகலிங்கம் மணல்மேடு போலீசில் நேற்று புகார் செய்தார். அதில் தனது மகளை புத்தூர் கடகம் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திர அய்யனார் மகன் அருள் என்பவர் கடத்தி சென்று விட்டதாக கூறியுள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அனிதாவை தேடி வருகின்றனர்.
Average Rating