வாழப்பாடியில் சிறுமி மாயம்!!
வாழப்பாடி அருகே தனியார் ஸ்பின்னிங் மில்லில் பணி புரிந்த சிறுமி மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் கார் கூடல்பட்டி ராஜாபாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி குப்பன் மகள் சிவிதா,16.
வாழப்பாடி அடுத்த சிட்டாம்பட்டியிலுள்ள குப்பனின் சகோதரி இளையம்மாள் வீட்டில் தங்கியிருந்த சிறுமி சிவிதா, மேட்டுப்பட்டியிலுள்ள வீனஸ் தனியார் ஸ்பின்னிங் மில்லில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 21ந்தேதி ஸ்பின்னிங் மில்லில் இருந்து வெளியேறி அவர், அவரது தந்தை குப்பனை பார்ப்பதற்கு கார் கூடல்பட்டிக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே, மாயமான தனது மகளை மீட்டுதரக்கோரி, அவரது தந்தை குப்பன், நேற்று வாழப்பாடி போலீஸில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் கேர்ள் மிஸ்ஸிங் வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீஸார், மாயமான சிறுமியை மீட்க விசாரனை நடத்தி வருகின்றனர்.
Average Rating