விஜயவாடாவில் மாணவிகளை நிர்வாண படம் எடுத்த கும்பல் கைது!!
விஜயவாடாவில் மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி நிர்வாண படம் எடுத்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கைதான சாய்ராம், தீபக், அபிலேஸ்குமார், சேக் முன்னா மற்றும் மைனர் இளைஞர் ஆகியோரிடம் 10–க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து விஜயவாடா போலீஸ் கமிஷனர் வெங்கடேஸ்வரராவ், சட்டம்– ஒழுங்கு டி.ஜி.பி. ஆஸ்சிஸ் இக்பால் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–
கைதான இளைஞர்கள் 5 பேரும் ஏழ்மை நிலையில் உள்ள இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளை மயக்கி தங்களது காதல் வலையில் வீழ்த்துவார்கள். முதலில் அவர்களுடன் நம்ட்பாக பழகி மோட்டார் சைக்கிளில் உல்லாச இடங்களுக்கு அழைத்து செல்வார்கள். பெரிய ஓட்டல்களுக்கு அழைத்து சென்று விருந்து கொடுப்பார்கள்.
அவர்களை காதலிப்பது போல் நடிப்பார்கள். இந்த ஆடம்பரத்தில் மயங்கிய பெண்கள் அவர்களிடம் முழுமையாக தன்னை கொடுத்து விடுவார்கள்.
தங்கள் வலையில் வீழ்ந்த பெண்களை தனிமையான வீட்டுக்கு அழைத்து சென்று கேமிராவில் நிர்வாண படங்களை எடுப்பார்கள். சில கட்டங்களில் ரகசிய கேமிரா மூலம் அவர்களை ஆபாசமாக படம் எடுத்து உள்ளனர்.
பின்னர் அந்த படங்களை காட்டி அந்த பெண்ணை மிரட்டி நகை–பணம் பறிப்பார்கள். குடும்ப கவுரவம் கருதி வெளியில் சொல்லாமல் சில மாணவிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.
இந்த கும்பல் பற்றி ஒரு மாணவி புகார் செய்ததின் பேரில் ரகசியமாக கண்காணித்து அவர்களை கைது செய்து உள்ளோம். இந்த கும்பலில் சிக்கி 10 பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
புகார் செய்த பெண்ணின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இந்த கும்பலில் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் போலீசில் புகார் செய்யலாம். அவர்களது பெயர் ரகசியமாக வைக்கப் படுவதால் வழக்கில் கூட சேர்க்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கைதானவர்களில் ஒருவர் மைனர் இளைஞர் என்பதால் அவரை தவிர்த்து மற்றவர்களின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டனர்.
கைதானவர்களில் ஒருவன் பிரபல அரசியல் பிரமுகரின் மகன் என்று கூறப்படுகிறது.
Average Rating