தனியார் தொழிற்சாலையில் வாயு கசிவால் வாலிபரின் கண் பார்வை பறிபோனது!!

Read Time:1 Minute, 25 Second

4bd94a39-d520-4018-89e4-f0f1b2908c37_S_secvpfபுதுவை மேட்டுப் பாளையம் பிப்டிக் தொழிற் பேட்டையில் தனியார் ரசாயன வாயு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வில்லியனூர் அருகே ஜி.என்.பாளையத்தை சேர்ந்த முத்துலிங்கம் (வயது 33) ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை முத்து லிங்கம் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது வாயு கசிவு ஏற்பட்டு இவரது கண்ணில் பட்டது. இதனால் முத்துலிங்கம் கண் எரிச்சல் மற்றும் வலியால் அலறி துடித்தார். மேலும் அவருக்கு கண்பார்வையும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த மற்ற ஊழியர்கள் முத்துலிங்கத்தை மீட்டு தவளக்குப்பத்தில் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேலத்தில் காப்பகத்தில் இருந்து மாயமான பெண் எங்கே?
Next post ராஜாக்கமங்கலம் அருகே மது விற்ற பெண் கைது!!