பள்ளி மாணவிக்கு செக்ஸ் தொல்லை: ஒரிசா வாலிபர்கள் 2 பேர் கைது!!
ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சேகர் பிரித்திவோ (25), பிருந்தா பிரித்திவோ (24). இவர்கள் 2 பேரும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நடுவீரபட்டில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தனர்.
அதே பகுதியை சேர்ந்தவர் தேவி (8) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவள் அங்குள்ள அரசு பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வந்தாள்.
தேவி நேற்று அதே பகுதியில் உள்ள கடைக்கு சாமான் வாங்க சென்றார். பின்னர் நடந்து வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது சேகர் பிரித்திவோ, பிருந்தா பிரித்திவோ 2 பேரும் சேர்ந்து தேவியின் வாயை பொத்தி கைபிடித்து இழுத்து மறைவான இடத்திற்கு தூக்கி சென்றனர்.
பின்னர் தேவியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். தேவி அலறினாள். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து சேமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்கு பதிவு செய்து 2 பேரை தேடி வந்தனர். அப்போது சேகர் பிரித்திவோ, பிருந்தா பிரித்திவோ சேமங்கலம் பஸ் நிலையத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Average Rating