ஆண்டிப்பட்டியில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை: கணவர் கைது!!

Read Time:1 Minute, 32 Second

02d41d05-15f2-4b15-a0e1-2b0830f07ef5_S_secvpfதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சீனிவாச நகரை சேர்ந்தவர் அழகிரிராஜா (வயது31). இவருக்கும் ரம்யா (22) என்பவருக்கும் கடந்த 13.3.2014–ந் தேதி திருமணம் நடந்தது. அப்போது 19 பவுன் நகை, ரொக்க பணம் மற்றும் பொருட்கள் சீதனமாக கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் அழகிரிராஜா மேலும் வரதட்சணை வாங்கி வருமாறு மனைவி ரம்யாவை தொந்தரவு செய்துள்ளார். இதற்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடந்தையாக இருந்துள்ளனர்.

ரம்யா தனது வீட்டு நிலமையை எடுத்துக்கூறி இனிமேல் அங்கிருந்து பணம் எதுவும் வாங்கி வர முடியாது என்றார்.

அதனை அலட்சியம் செய்த அழகிரி ராஜா கூடுதல் வரதட்சணை வாங்கி வந்தால்தான் உன்னுடன் குடும்பம் நடத்துவேன் என்று கொடுமைப்படுத்தி உள்ளார்.

இதனால் மனமுடைந்த ரம்யா வேறு வழியின்றி ஆண்டிப்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தி அழகிரிராஜாவை கைது செய்தனர். அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குரோம்பேட்டை மகளிர் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை!!
Next post திருவெண்காட்டில் மகளை கொலை செய்த பெண் கைது!!