கோவையில் கருத்தரிக்க ஊசி போட்ட வடமாநில பெண் மர்ம சாவு!!
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சலுவுக்சாவுத். கோவையில் தங்கநகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுஜாதாசாவுத்(வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 7 வருடம் ஆகிறது. கொஞ்சி மகிழ ஒரு குழந்தை இல்லை.
இதனால் கணவனும்–மனைவியும் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். தொடர் சிகிச்சையின் ஒரு பகுதியாக சுஜாதாசாவுத் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அங்கு அவருக்கு கருத்தரிப்பதற்கான ஊசி போடப்பட்டது. அதன் பின்னர் வீடு திரும்பினார். நள்ளிரவில் திடீரென்று சுஜாதாசாவுத்துக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு டாக்டர்கள் இல்லாததால் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே சுஜாதாசாவுத் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வெரைட்டி ஹால் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Average Rating