வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தொழிலாளியிடம் பணம் பறித்த சிறுவன்!!
Read Time:1 Minute, 2 Second
வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் இர்பான்அகமது (வயது 38), தொழிலாளி. இவர் நேற்று காலை வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஆற்காடு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார். அங்கு வந்த பஸ்சில் இர்பான் அகமது ஏறினார்.
அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆர்.என். பாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் இர்பான் அகமதுவின் பாக்கெட்டில் இருந்த பர்சை எடுத்து கொண்டு ஓடினான். அங்கிருந்தவர்கள் சிறுவனை கையும், களவுமாக பிடித்து வேலூர் வடக்கு போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் ரீனா வழக்குப்பதிவு அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating