போலீஸ்காரர் வீட்டில் காதலி எரித்துக்கொலை?: போலீசார் விசாரணை!!
மதுரை ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் மகேந்திரன். இவர் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்னர். குடும்ப தக ராறில் அவர்கள் மகேந்தி ரனிடம் கோபித்து கொண்டு தனியாக சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மகேந் திரன் வீட்டில் இருந்து இன்று காலை புகை வந்துள்ளதை அக்கம் பக்கத் தினர் பார்த்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் தல்லாகுளம் போலீசார் ஆயுதப்படை குடியிருப்புக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போலீஸ் காரர் மகேந்திரனின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது அங்கு வீட்டுக் குள் ஒரு பெண் தீயில் கரு கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த பெண்ணின் பெயர் ஆனந்தி (வயது32) என்பதும், கே.கே.நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மனைவி என்பதும் தெரியவந்தது.
கடந்த ஓராண்டாக கணவரை பிரிந்து ஆனந்தி வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் அவருக்கும், போலீஸ்காரர் மகேந்திரனுக்கும் தொடர்பு ஏற்பட்டு இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக தெரிகிறது.
நேற்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் ஆனந்தி உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மகேந்திரனு டன் ஏற்பட்ட தகராறில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டாரா? அல்லது எரித்து கொல்லப்பட்டாரா? என்பது மர்மமாக உள்ளது.
தற்போது போலீஸ்காரர் மகேந்திரன் மாயமாகி விட்டார். அவர் சிக்கினால் தான் ஆனந்தி சாவின் உண்மை நிலவரம் தெரிய வரும். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
போலீஸ் குடியிருப்பிற் குள் போலீஸ்காரர் வீட்டிலேயே இளம்பெண் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating