குடித்து விட்டு பெண்களை கிண்டல் செய்வதாக கமிஷனரிடம் பொதுமக்கள் புகார்!!
Read Time:1 Minute, 23 Second
சேலம் சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு 7 மற்றும் 7–வது கிராஸ் பகுதியை சேர்ந்த பொது மக்கள் இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
மேற்கண்ட இந்த 2 தெருக்களிலும் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பெருமாள் கோவில் மேட்டை சேர்ந்த முருகன் என்பவரது மகன் ஆனந்தன், தலைமையில் கதிர்வேல், கார்த்தி, மூனாங்கரடை சேர்ந்த மோகன், தாதகாப்பட்டி கேட் கீழ் காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த 5 பேர் தினமும் இந்த பகுதியில் வந்து பெண்களை கேலி, கிண்டல் செய்வதும், குடித்து விட்டு ரகளையில் ஈடுபடுவதுமாக உள்ளனர்.
இதன் காரணமாக தெருவில் இருக்கும் இளம்பெண்களும், தாய்மார்களும் வெளியே வர பயப்படுகிறார்கள்.
எனவே போலீசார் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
Average Rating