கள்ளக்காதலை கண்டித்ததால் தாயை கொல்ல முயற்சி: மகளிடம் விசாரணை!!

Read Time:2 Minute, 0 Second

2747806c-4421-49a8-b4f9-855fa698a654_S_secvpfசென்னை கொருக்குப்பேட்டை நீலாம்பாள் நகரை சேர்ந்தவர் லட்சுமி (60). மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் சுமதி (25). இவருக்கும், பாலு என்பவருக்கும் 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கணவன்–மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாலு மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் சுமதி தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சுமதிக்கும், அதே பகுதியை சேர்ந்த செந்தில் குமார் (28) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. செந்தில் குமார் சுமதி வீட்டுக்கு சென்று அவரை தனியாக சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த லட்சுமி மகளையும், செந்தில் குமாரையும் கண்டித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுமதியும், செந்தில் குமாரும் லட்சுமியை தாக்கி கீழே தள்ளினர். பின்னர் அவரை கழுத்தை நெரித்து கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

லட்சுமி அவர்களிடம் இருந்து தப்பிக்க கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வந்தனர். இதனால் செந்தில்குமார் அங்கிருந்து தப்பி விட்டார்.

இது குறித்து லட்சுமி ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் இது தொடர்பாக சுமதியை விசாரித்து வருகிறார். செந்தில் குமாரை தேடி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சங்கிலி பறிப்பின் போது திருடர்களிடம் போராடிய பேராசிரியை!!
Next post உணவின்றி எழுந்து நடக்க முடியாமல் உயிருக்கு போராடும் மூதாட்டி!!