இளம்பெண் தீக்குளித்து சாவு: கணவரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை!!
குளச்சல் அருகே கோடி முனையைச் சேர்ந்தவர் ராஜ். (வயது 32). கேரளாவில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்.
இவரது மனைவி விஜிலா (23). இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜ் நேற்று முன்தினம் கேரளாவில் மீன்பிடி தொழிலை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். ராஜ் வீட்டில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் விஜிலா பக்கத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஜிலா குளியல் அறைக்கு சென்று உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி சிகிச்சைக்காக குளச்சல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து விஜிலாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குளச்சல் சப்–இன்ஸ்பெக்டர் ரசலையன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
திருமணமாகி 1 வருடமே ஆவதால் விஜிலா தற்கொலை செய்து கொண்டது குறித்து பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. அருண்சத்யா விசாரணை மேற்கொண்டுள்ளார். விஜிலா சாவு குறித்து அவரது கணவர் ராஜிடமும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையில் பலியான விஜிலாவின் உடல் இன்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Average Rating