காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை!!
பழனி அருகில் உள்ள புது தாராபுரம் ரோடு செட்டியார் மில் பின்புறம் வசித்து வருபவர் விக்டர். இவர் அனிதா(23) என்பவரை கடந்த 2½ வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கடந்த சில நாட்களாக அனிதாவிற்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் மிகுந்த சோகத்தில் இருந்துவந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழனி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 2½ வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல்விசாரணை செய்து வருகிறார்.
பழனி அருகில் உள்ள மரிசிலம்பு பூலாம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் விக்னேஸ்வர ராஜா(26). இவர் உடுமலைப்பேட்டையில் ஒரு தனியார் கோழிப்பண்ணையில் வேலைபார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த அவர் சாப்பிட்டு தூங்கினார். மாலையில் வாந்தி மயக்கம் ஏற்படவே அவரை கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார். அவர் தனது தந்தைக்கு தான் தற்கொலை செய்து கொள்வதாக எஸ்.எம்.எஸ். அனுப்பி இருந்தது பின்னர் தெரியவந்தது.
அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating