உ.பி.யில் மாணவியை காரில் கடத்திச் சென்று, ஒரு வாரமாக அடைத்து வைத்து 6 பேர் கற்பழித்த கொடூரம்!!

Read Time:2 Minute, 1 Second

91193ca7-28a9-43c3-9f6c-664952b38775_S_secvpfஉத்தரப்பிரதேசம் மாநிலம், சண்டவுலி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 17 வயது மதிக்கத்தக்க பெண், அங்குள்ள பள்ளியில் ‘பிளஸ்-டூ’ வகுப்பில் படித்து வந்தார்.

கடந்த 9-ம் தேதி அந்த மாணவி பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த போது, அவ்வழியே ஒரு காரில் வந்த மர்ம கும்பல், அவளை காருக்குள் இழுத்துப் போட்டுக் கொண்டு வேகமாக தப்பிச் சென்றது.

அலகாபாத் நகரின் தனிமையான பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அந்த மாணவியை சுமார் ஒரு வார காலமாக அடைத்து வைத்திருந்த அந்த கும்பலை சேர்ந்த 6 பேரும் அவளை மாறி, மாறி கற்பழித்துவிட்டு, மயங்கிக் கிடந்த மாணவியை அதே காரில் போட்டு, கொண்டுவந்து வாரணாசி நகரில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தின் அருகே கடந்த திங்கட்கிழமை இரவு கீழே தள்ளிவிட்டது.

அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவன் மாணவியின் பெற்றோருக்கு போன் செய்து, உங்கள் மகள் கண்ட் ரெயில் நிலையத்தின் அருகே மயங்கி விழுந்துக் கிடக்கிறாள் என்று கூறி, போன் இணைப்பை துண்டித்தான்.

பதறியடித்துக் கொண்டு அங்கு ஓடிவந்த பெற்றோர், மாணவிக்கு மயக்கம் தெளிவித்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று புகார் அளித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் 6 பேரையும் தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை ரோஜா உருவ பொம்மை எரிப்பு!!
Next post வள்ளியூர் அருகே 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளி கைது!!