தொட்டியம் அருகே மூதாட்டி அடித்து கொலை!!
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள மேய்க்கல்நாய்க்கன்பட்டியில் திருச்சி–நாமக்கல் சாலையில் குறுக்கே உள்ள வாய்க்கால் பாலத்திற்கு அடியில் ரத்த வெளியே தெரிந்த நிலையில் ஒரு சாக்கு மூட்டை கிடப்பதாக எம்.களத்தூர் கிராம நிர்வாக அலுவலர் மோகன் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின்பேரில் தொட்டியம் இன்ஸ்பெக்டர் மூர்த்தி காட்டுப்புத்தூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் ராமநாதன், பாலசந்திரன் உளவுபிரிவு ஏட்டு கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது உடலில் ரத்த காயங்களுடன் மூதாட்டி உடல் இருந்தது.
இறந்து போன மூதாட்டி ஆரஞ்சு கலரில் சேலையும் சிகப்பு கலரில் வெள்ளை பூ போட்ட ஜாக்கெட் மற்றும் மூக்குத்தி அணிந்திருந்தார். சம்பவ இடத்தை திருச்சி காவல் உதவி சூப்பிரண்டு அசோக்குமார், முசிறி துணை சூப்பிரண்டு தங்கவேல் ஆகியோர் பார்வையிட்டனர்.
மேலும் திருச்சியில் இருந்து மோப்ப நாய் அர்ஜீன் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தின் இருந்து கிழக்கு புறமாக ஓடி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள ஒரு தனியார் கம்பெனி முன்பு நின்றது.
மேலும் மேய்க்கல் நாய்க்கன் பட்டி திருச்சி மாவட்டத்தின் எல்லையாக இருப்பதால் அதற்கு அடுத்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருந்து மூதாட்டியை அடித்து கொலை செய்து இங்கு வந்து இரவு நேரத்தில் வீசி சென்றி ருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating