எச்சில் தண்ணீர் மேலே பட்டதால் ஆத்திரம்: பெண்ணை கத்தியால் குத்திய டிரைவர் கைது!!

Read Time:1 Minute, 56 Second

ca2ef3fa-3fed-45dd-a468-38b3f1f795f8_S_secvpfகோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் வெள்ளருக்காபாளையத்தை சேர்ந்தவர் ஜின்னான். இவரது மனைவி பூவாத்தாள் (வயது 50). இவர் சம்பவத்தன்று வீட்டில் சாப்பிட்டு விட்டு சாப்பிட்ட தட்டை கழுவி எச்சில் நீரை வீட்டுக்கு வெளியே ஊற்றினார்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் ஆறுச்சாமி (30) மீது தண்ணீர் கொட்டியது. ஆறுச்சாமிக்கும், பூவாத்தாளுக்கு ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் எச்சில் தண்ணீர் மேலே தெரித்ததால் ஆத்திரமடைந்த ஆறுச்சாமி இதுகுறித்து பூவாத்தாளை திட்டினார். இதனால் இருவருக்குமிடையே வாய்த்தகராறு மூண்டது.

ஆறுச்சாமி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பூவாத்தாளின் முதுகில் குத்தினார். இதில் படுகாயமடைந்த பூவாத்தாள் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் ஆறுச்சாமியை கைது செய்து கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் ஆறுச்சாமி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமான நிலையத்தில் நடிகை மீது மானபங்கம்!!
Next post கடன் தொல்லையால் அவதி: தொழிலதிபர் தற்கொலை!!