2 பெண்கள் சேர்ந்து ஒரு ஆணை ‘கேங் ரேப்’ செய்த ‘ஷாக்’ சம்பவம்!!

Read Time:2 Minute, 52 Second

2025733885gunp2மெரிக்காவின் சிகாகோவில் இரண்டு பெண்கள் சேர்ந்து துப்பாக்கி முனையில் ஒரு ஆணை கேங் ரேப் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேங் ரேப் செய்ததோடு விடாமல் அவர் வைத்திருந்த பல்வேறு பொருட்களையும் ஆட்டையைப் போட்டுக் கொண்டு போய் விட்டனர் அந்தப் பெண்கள்.

இந்த சேட்டையில் ஈடுபட்ட இரு பெண்களில் ஒருவரது பெயர் சியரா ரோஸ் என்று தெரிய வந்துள்ளது. இவர் இரண்டு குழந்தைகளுக்குத் தாய் ஆவார். தற்போது கேங் ரேப்பில் ஈடுபட்ட இரு பெண்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர். நடந்தது என்ன…. சிகாகோவைச் சேர்ந்த 33 வயதான நபர் சாலையில் போய்க் கொண்டிருந்தபோது இந்த இரு பெண்களும் காரில் வந்துள்ளனர்.

லிப்ட் தருவதாக கூறவே அந்த நபரும் காரில் ஏறியுள்ளார். உள்ளே ஏறியதும் திடீரென ரோஸ் தனது பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து அந்த நபரை மிரட்டி பின் சீட்டுக்குப் போகச் சொல்லியுள்ளார். அவரும் போயுள்ளார்.

அங்கு போனதும், அந்தப் பெண், தன்னுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு அந்த நபரை மிரட்டினார். வேறு வழியில்லாமல் அந்த நபரும் உறவு கொண்டார். அது முடிந்ததும், ரோஸின் தோழியும் அதே போல மிரட்டி உறவு வைத்துக் கொண்டார்.

பின்னர் இரு பெண்களும் அந்த நபர் வைத்திருந்த 200 டாலர் பணம், கிரெடிட் கார்டுகளை திருடிக் கொண்டு விட்டு காரை விட்டு அந்த நபரை கீழே தள்ளி விட்டு கிளம்பி விட்டனர். கீழே தள்ளப்பட்ட நபரின் கோலத்தைப் பார்த்த ஒரு டாக்சி டிரைவர் உதவிக்கு ஓடி வந்தார். அவரின் உதவியுடன், திருட்டுப் பெண்களின் கார் நம்பர் பிளேட்டை கேமரால் போட்டோ எடுத்துக் கொண்ட அந்த நபர் பின்னர் அதை வைத்து போலீஸில் புகார் கொடுத்தார்.

போலீஸார் துரித கதியில் செயல்பட்டு ரோஸையும், அவரது தோழியையும் கைது செய்தனர். ரோஸ், ஏற்கனவே விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட பழைய குற்றவாளியாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வியட்ஜெட் விளம்பரத்திற்கு ‘பிகினி’யில் போஸ் கொடுத்த ஏர் ஹோஸ்டஸ்கள்!!
Next post 35 வருடங்களாக குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்தவர் சடலமாக மீட்பு!!