செய்யாறு அருகே மாணவன் மர்ம சாவு: போலீசார் விசாரணை!!
செய்யாறு அடுத்த செங்காடு கிராமத்தை சேர்ந்தவர் தணிகைவேல். இவரது மகன் அஜீத்குமார் (வயது 14). செங்காடு அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
அதே ஊரைச் சேர்ந்த வேலு மகன் சந்தோஷ் (13). இவரும் அதே பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 28ம் தேதி அஜீத்குமார், சந்தோஷ் இருவரும் அதே ஊரில் ஒரு வீட்டின் பின்புறம் கோலி விளையாடினர்.
இந்நிலையில் அன்று மாலை அஜீத்குமார் மயக்க நிலையில் கிடப்பதாக சிலர் தணிகைவேலிடம் தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தார்.
அங்கு அஜீத்குமார் வாயில் நுரையுடன் விழுந்து கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அஜீத்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அனக்காவூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மர்மச் சாவாக வழக்குபதிவு செய்து அஜீத்குமார் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating