ஜனாதிபதி, ஜோன் உள்ளிட்ட குழு இன்று வத்திக்கான் பயணம்!!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வத்திக்கான் செல்கிறார். இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு வத்திக்கான் பயணமாகும் ஜனாதிபதி, பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் திருத்தந்தையை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசரைச் சந்திக்கும் ஜனாதிபதி, அவரது இலங்கை விஜயத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பினை விடுக்கவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.
எதிர்வரும் 2015 ஜனவரி 13ம் திகதி பரிசுத்த பாப்பரசர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.
அதற்கான முன்னேற்பாடுகளை கொழும்பு உயர் மறைமாவட்டம் மேற்கொண்டு வருகிறது.
இதேவேளை, வத்திக்கான் செல்லும் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்கவும் அடங்குகிறார்.
இந்த விஜயத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தனக்கு அனுமதி அளித்துள்ளதாக ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் அனுமதியுடன் இதற்கு முன்னரும் ஜோன் அமரதுங்க, ஜனாதிபதியுடன் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating