2 மனைவிகளும் ஏமாற்றியதால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை!!

Read Time:1 Minute, 32 Second

6f6eeaa7-a467-412f-ab06-ee8330953537_S_secvpfநத்தம் அருகில் உள்ள வேலாயுதம்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சின்னான் (வயது40). இவருக்கு வள்ளி, சுதா ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். வெள்ளைசின்னான் கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த 1 வருடத்திற்கு முன்பு வள்ளியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர் தனது கணவரை விட்டு பிரிந்து சிரங்காட்டுபட்டியில் உள்ள தனது தந்தையுடன் வசித்து வருகிறார்.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுதாவுடனும் கருத்து வேறுபாடு ஏற்படவே அவரும் கணவரை பிரிந்து தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார்.

கேரளாவில் வேலை பார்த்து வந்த வெள்ளைசின்னான் சம்பவத்தன்று சொந்த ஊருக்கு வந்து தனது 2 மனைவிகளையும் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அதற்கு இனிமேல் உன்னுடன் சேர்ந்து வாழமுடியாது என்று 2 பேரும் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இதனால் மனமுடைந்த அவர் தோட்டத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது!!
Next post மதுரையில் காதல் திருமணம் செய்த இளம்பெண் மரணம்!!