நாட்டில் கல்வியை சீரழிக்கும் வேலையை எஸ்.பி. திஸாநாயக்க செய்கிறார்!!
நாட்டின் கல்வியை சீரழிக்கும் வேலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவிற்கு வழங்கியுள்ளதாக சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் தமது பிரச்சினைகள் பலவற்றை முன்வைத்து பம்பகின்ன சந்தியில் போராட்டம் நடத்திய நிலையில் அதற்கு செவிசாய்க்காத அரசாங்கம் இன்று பல்கலைக்கழகத்தை இழுத்து மூடியுள்ளதாக பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவும் மாணவர்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை என பத்தரமுல்லையில் உள்ள ஜேவிபி அலுவலகத்தில் இன்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டினார்.
எஸ்.பி.திஸாநாய்க்க மாணவர்கள் தொடர்பில் குரோதத்துடன் செயற்பட்டு வருவதாகவும் கல்வியை சீரழிப்பதாகவும் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.
வதைசெய்பவர் போல இருந்து எஸ்.பி மாணவர்களை நோக்குவதாகவும் கல்வித்துறைக்கு அரசியல் கையாட்களை உருவாக்கி வருவதாகவும் பிமல் குற்றம் சுமத்தியுள்ளார்.
தேர்தல் காலம் காரணமாக அமைதியாக இருப்பதாகவும் இல்லாவிட்டால் குழப்பம் விளைவிக்கும் மாணவர்களை நன்கு கவனிக்க முடியும் என்றும் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க நேற்று சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating