தேன்கனிக்கோட்டை நர்ஸ் திடீர் மாயம்!!
Read Time:1 Minute, 1 Second
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் யாஷ்மின் (வயது 19). இவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நர்ஸ் படிப்பு படித்து வந்தார். ஆஸ்பத்திரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார்.
நேற்று இரவு இவர் பணிக்கு சென்றார். பின்னர் அவர் திடீரென மாயமாகி விட்டார். இவரை அவருடன் பணியாற்றும் மற்ற நர்சுகள் தேடி பார்த்தனர். ஆனால் அவர் எங்கும் இல்லை. பிறகு இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இதன் பேரில் அம்சா என்பவர் சேலம் அரசு ஆஸ்பத்திரி புறக்காவல்நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Average Rating