பெருந்துறை அருகே வாய்க்காலில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை!!
பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால் மேடு என்ற இடத்தை சேர்ந்தவர் ஜான் ஜோசப். இவரது மகன் டேவிட் அரவிந்தராஜ் (வயது 18). இவர் ஒரு தனியார் கல்லூரியில் பி எஸ்சி படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வெகுநேரம் வரை டேவிட் அரவிந்தராஜ் செல்போனில் விளையாடி கொண்டும் பேசிக் கொண்டும் இருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த அவரது தந்தை டேவிட் ஜான் திட்டினார். ‘இவ்வளவு நேரம் என்ன செய்கிறாய் போய் படு’ என்று கூறினார்.
இதன்பிறகு அவர் வீட்டில் படுத்து தூங்கினார். நேற்று அதிகாலை 3 ½ மணி அளவில் எழுந்து பார்த்த போது படுக்கையில் இருந்த டேவிட் அரவிந்தராஜை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை ஜான்ஜோசப் அரவிந்தராஜை பல இடங்களில் தேடினார். ஆனால் அவரை காணவில்லை.
இந்த நிலையில் பெருந்துறை அருகே உள்ள ஆண்டிக்காடு என்ற இடத்தில் உள்ள வாய்க்காலில் மதகு பகுதியில் அரவிந்தராஜின் உடல் ஒதுங்கியது தெரிய வந்தது.
தந்தை திட்டியதால் மனம் உடைந்த அவர் தனது வீட்டின் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
அரவிந்தராஜ் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அரவிந்தராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Average Rating