பிரதி அமைச்சரின் கடைத் தொகுதி மீண்டும் தீக்கிரை!!!

Read Time:1 Minute, 9 Second

1931805735587174530Lதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் உள்ள, பெற்றோலிய வளப் பிரதி அமைச்சர் சரண குணவர்த்தனவிற்குச் சொந்தமான கடைத் தொகுதியில் தீப்பற்றியுள்ளது.

நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ தீயணைப்புப் படையினரின் உதவியுடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தீ காரணமாக துணிக் கடை, பழக் கடை, மரக்கறிக் கடை மற்றும் பிளாஸ்டிக் கடை ஆகியன எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி அமைச்சரின் இக்கடை தொகுதியை கூலிக்கு வாங்கி வியாபாரம் செய்தவர்கள் தீ விபத்தால் பெரிதும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

6 மாதங்களுக்கு முன்னரும் குறித்த கடைத் தொகுதி தீக்கிரையானமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெரியகுளத்தில் குப்பை மேட்டில் வீசப்பட்ட 6 மாத பெண் சிசு!!
Next post பூ பறிக்கச் சென்ற மாணவன் குளத்தில் விழுந்து பலி!!