தற்கொலை செய்ய கடலில் குதித்த பெண்ணை காப்பாற்றிய பொலிஸார்!!
Read Time:1 Minute, 5 Second
மாத்தறை – பரேவ் தீவுக்கு அருகிலுள்ள கடலில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணொருவர் பொலிஸாரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இன்று காலை கடலில் குதித்து தற்கொலை செய்ய முற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதன்போது பிரதேச மக்கள் மற்றும் பொலிஸாரால் காப்பாற்றப்பட்ட இவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடும்பப் பிரச்சினை காரணமாக மனமுடைந்த நிலையிலேயே இவர் தற்கொலைக்கு முயன்றதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும் தற்போது இவர் மாத்தறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
Average Rating