வேட்டையாடச் சென்ற இராணுவ வீரர் பலி!!
Read Time:53 Second
புத்தல – பொத்துவில் பகுதியில் வேட்டையாடச் சென்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இராணுவ சிப்பாயால் கொண்டு செல்லப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்த நிலையில், லாகுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே இவர் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மரணமடைந்தவர் புத்தல இராணுவ முகாமில் கடமையாற்றிய 40 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை லாகுகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating